கோவையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியர்

கோவை: கோவையில் கல்லூரி உதவி பேராசிரியரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவையில் கல்லூரி உதவி பேராசிரியரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி, சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இன்று இவரது அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 



இந்தத் தகவலையடுத்து போலீசார் அவரது அறைக்குச் சென்று கதவை உடைத்துப் பார்த்தபோது, அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். திருமணமாகாத விஜயகுமாரின் தாய் சமீபத்தில் தான் இறந்துள்ளார். தாய் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா..? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

அவர் உயிரிழந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியிருக்கும். அதனால், முற்றிலும் அழுகிய நிலையில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரி பேராசிரியர் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...