நீலகிரி : பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி உதகையில் இன்று நடைபெற்ற அரசியல் கட்சி மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீலகிரி : பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி உதகையில் இன்று நடைபெற்ற அரசியல் கட்சி மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமாக திகழ்ந்து வருவது தேயிலை விவசாயம். இதில், சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பல விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தங்களது தேயிலை தோட்டங்களை செல்வந்தர்களுக்கு விற்று சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் இன்று உதகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக விலை நிர்ணய குழு தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிப்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் கோரிக்கை எடுத்து செல்வது மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமாக திகழ்ந்து வருவது தேயிலை விவசாயம். இதில், சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பல விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தங்களது தேயிலை தோட்டங்களை செல்வந்தர்களுக்கு விற்று சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் இன்று உதகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக விலை நிர்ணய குழு தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிப்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் கோரிக்கை எடுத்து செல்வது மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.