பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்

நீலகிரி : பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி உதகையில் இன்று நடைபெற்ற அரசியல் கட்சி மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீலகிரி : பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி உதகையில் இன்று நடைபெற்ற அரசியல் கட்சி மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமாக திகழ்ந்து வருவது தேயிலை விவசாயம். இதில், சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 



மேலும், பல விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தங்களது தேயிலை தோட்டங்களை செல்வந்தர்களுக்கு விற்று சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் இன்று உதகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக விலை நிர்ணய குழு தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிப்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் கோரிக்கை எடுத்து செல்வது மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...