திருப்பூர்: உடுமலை அருகே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் கடந்த ஆறு நாட்களாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மழைவாழ் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்பூர்: உடுமலை அருகே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் கடந்த ஆறு நாட்களாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மழைவாழ் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கீளானவயல்,தளிஞ்சி வயல், உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. 600-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனிடையே மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை கேரளா வனத்துறை கம்பி வேலி அமைத்து பாதை மறித்ததால் கூட்டாறு வழியாக வந்து சென்றனர்.
இந்நிலையில் மழைக் காலங்களில் கூட்டாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடா்ச்சிமலை பகுதி மற்றும் கேரளா மாநிலம் மூணாறு சின்னாறு மறையூா் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தளிஞ்சிபகுதி மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத காரணத்தால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ரேசன் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனமும் செல்ல முடியாமல் சின்னாறு சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் எந்த வித உதவிகளும் கிடைப்பதில்லை என்றும், மலைவாழ் மக்களின் தேவைகளை அரசுக்குத் தெரிவிக்காமல் அரசையும் மக்களையும் வனத்துறையினர் ஏமாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது கூட்டாற்றில் 5,000 கனஅடி தண்ணீர் வருவதால் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கூட ஊருக்குள் வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று கூட்டாறு பகுதியை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்தவுடன் உயர்நிலை பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், கேரள வனத்துறையினருடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைக்கு சம்பக்காடு பகுதியில் தளிஞ்சி பகுதி மக்கள் பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் இந்த செய்தி தொடர்பான செய்திக்கு - கிளிக் செய்யவும்

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கீளானவயல்,தளிஞ்சி வயல், உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. 600-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனிடையே மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை கேரளா வனத்துறை கம்பி வேலி அமைத்து பாதை மறித்ததால் கூட்டாறு வழியாக வந்து சென்றனர்.
இந்நிலையில் மழைக் காலங்களில் கூட்டாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடா்ச்சிமலை பகுதி மற்றும் கேரளா மாநிலம் மூணாறு சின்னாறு மறையூா் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தளிஞ்சிபகுதி மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத காரணத்தால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ரேசன் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனமும் செல்ல முடியாமல் சின்னாறு சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் எந்த வித உதவிகளும் கிடைப்பதில்லை என்றும், மலைவாழ் மக்களின் தேவைகளை அரசுக்குத் தெரிவிக்காமல் அரசையும் மக்களையும் வனத்துறையினர் ஏமாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது கூட்டாற்றில் 5,000 கனஅடி தண்ணீர் வருவதால் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கூட ஊருக்குள் வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று கூட்டாறு பகுதியை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்தவுடன் உயர்நிலை பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், கேரள வனத்துறையினருடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைக்கு சம்பக்காடு பகுதியில் தளிஞ்சி பகுதி மக்கள் பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் இந்த செய்தி தொடர்பான செய்திக்கு - கிளிக் செய்யவும்