ஆற்றைக் கடக்க முடியாமல் ஆறு நாட்களாக திண்டாடும் மலைவாழ் மக்கள் : அமைச்சர் ஆய்வு

திருப்பூர்: உடுமலை அருகே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் கடந்த ஆறு நாட்களாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மழைவாழ் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருப்பூர்: உடுமலை அருகே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் கடந்த ஆறு நாட்களாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மழைவாழ் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.



திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கீளானவயல்,தளிஞ்சி வயல், உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. 600-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இதனிடையே மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை கேரளா வனத்துறை கம்பி வேலி அமைத்து பாதை மறித்ததால் கூட்டாறு வழியாக வந்து சென்றனர்.

இந்நிலையில் மழைக் காலங்களில் கூட்டாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடா்ச்சிமலை பகுதி மற்றும் கேரளா மாநிலம் மூணாறு சின்னாறு மறையூா் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தளிஞ்சிபகுதி மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத காரணத்தால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

ரேசன் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனமும் செல்ல முடியாமல் சின்னாறு சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் எந்த வித உதவிகளும் கிடைப்பதில்லை என்றும், மலைவாழ் மக்களின் தேவைகளை அரசுக்குத் தெரிவிக்காமல் அரசையும் மக்களையும் வனத்துறையினர் ஏமாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது கூட்டாற்றில் 5,000 கனஅடி தண்ணீர் வருவதால் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கூட ஊருக்குள் வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று கூட்டாறு பகுதியை பார்வையிட்டனர்.



அதன் பின்னர் ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்தவுடன் உயர்நிலை பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், கேரள வனத்துறையினருடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைக்கு சம்பக்காடு பகுதியில் தளிஞ்சி பகுதி மக்கள் பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் இந்த செய்தி தொடர்பான செய்திக்கு - கிளிக் செய்யவும்

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...