கோவை: காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தமிழகத்திற்கு அரசு எந்த துரோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தமிழகத்திற்கு அரசு எந்த துரோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
குறிச்சி குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்துள்ளார்.
எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலரும், அரசியல் கட்சியினர் சிலரும் எதிர்க்கின்றனர். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எந்த நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு பின்வாங்காது.
காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை. கர்நாடக தேர்தலுக்காக தான் மத்திய அரசு காலதாமதம் செய்தது. காவிரி பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளே துரோகம் செய்தது.
வருமான வரித்துறை சோதனை, ஊழல் குறித்து பேச தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. அ.தி.மு.க., ஆட்சியைக் கலைத்து விட்டு ஆட்சிக்கு வர ஸ்டாலின் முயற்சிக்கிறார்." என்று அவர் பேசினார்.
குறிச்சி குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்துள்ளார்.
எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலரும், அரசியல் கட்சியினர் சிலரும் எதிர்க்கின்றனர். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எந்த நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு பின்வாங்காது.
காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை. கர்நாடக தேர்தலுக்காக தான் மத்திய அரசு காலதாமதம் செய்தது. காவிரி பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளே துரோகம் செய்தது.
வருமான வரித்துறை சோதனை, ஊழல் குறித்து பேச தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. அ.தி.மு.க., ஆட்சியைக் கலைத்து விட்டு ஆட்சிக்கு வர ஸ்டாலின் முயற்சிக்கிறார்." என்று அவர் பேசினார்.