சேலம்: 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
சேலம்: 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சரக்கு மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதற்கு சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தலைமை வகித்தார். சேலம் கோட்ட வணிக பிரிவு முதுநிலை மேலாளர் ஏ.விஜுவின் வாடிக்கையாளர்களை வரவேற்றுப் பேசினார்.
பி.பி.சி.எல்., இந்திய உணவுக்கழகம், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், எஸ்.கே.எம்., தீவனம் நிறுவனம், சாந்தி தீவனம் நிறுவனம் மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் பேசுகையில், ”சேலம் ரயில்வே கோட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 13.89 சதவீதம் ஆகும். அதாவது, முந்தைய ஆண்டில் சரக்கு வருவாய் ரூ.58.7 கோடியாக இருந்தது," என்றார்.
ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தற்போதைய திட்டங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுடன் விவாதிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு சேவையை அதிகப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்துவித உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சரக்கு மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதற்கு சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தலைமை வகித்தார். சேலம் கோட்ட வணிக பிரிவு முதுநிலை மேலாளர் ஏ.விஜுவின் வாடிக்கையாளர்களை வரவேற்றுப் பேசினார்.
பி.பி.சி.எல்., இந்திய உணவுக்கழகம், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், எஸ்.கே.எம்., தீவனம் நிறுவனம், சாந்தி தீவனம் நிறுவனம் மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் பேசுகையில், ”சேலம் ரயில்வே கோட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 13.89 சதவீதம் ஆகும். அதாவது, முந்தைய ஆண்டில் சரக்கு வருவாய் ரூ.58.7 கோடியாக இருந்தது," என்றார்.
ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தற்போதைய திட்டங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுடன் விவாதிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு சேவையை அதிகப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்துவித உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.