கோவை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையின் போது கோவை விமான நிலையத்தில் வானுயர உயர்ந்த கரும்புகை காரணமாக பரப்பு ஏற்பட்டது.
கோவை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையின் போது கோவை விமான நிலையத்தில் வானுயர உயர்ந்த கரும்புகை காரணமாக பரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அப்போது, விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வானுயர அளவிற்கு கரும்புகை எழும்பியது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடி வேகமாக உள்ளே சென்றது. இதனால் வெளியே நின்றிருந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் பதற்றமடைந்தனர்.
இந்த சூழலில், இது வழக்கமாக நடைபெறும் தீ தடுப்பு ஒத்திகை தான் என்று விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளித்ததால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அப்போது, விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வானுயர அளவிற்கு கரும்புகை எழும்பியது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடி வேகமாக உள்ளே சென்றது. இதனால் வெளியே நின்றிருந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் பதற்றமடைந்தனர்.
இந்த சூழலில், இது வழக்கமாக நடைபெறும் தீ தடுப்பு ஒத்திகை தான் என்று விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளித்ததால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.