கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
நகர் ஊரமைப்பு துறையின் டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிருவுகளில் 20.10.2016 க்கு முன்னர் கிரயம் செய்த மனைகளை வரன்முறைப்படுத்துவது குறித்த அறிவிப்பினை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனுமதியற்ற மனைபிரிவுகளில் விற்கப்பட்ட மனைகளை www.tnlayoutreg.in என்ற நகர் ஊர்மைப்பு துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, இணையதள பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளர்களின் புகைப்படம், மனைப்பிரிவு வரைபடம், மனை வரைபடம், நில உரிமை சான்று, நில அளவை துறை சான்று மற்றும் வில்லங்க சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிய தொகையினை செலுத்தி 03.11.2018 தேதிக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு ஐந்து மண்டல அலுவலங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நகர் ஊரமைப்பு துறையின் டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிருவுகளில் 20.10.2016 க்கு முன்னர் கிரயம் செய்த மனைகளை வரன்முறைப்படுத்துவது குறித்த அறிவிப்பினை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனுமதியற்ற மனைபிரிவுகளில் விற்கப்பட்ட மனைகளை www.tnlayoutreg.in என்ற நகர் ஊர்மைப்பு துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, இணையதள பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளர்களின் புகைப்படம், மனைப்பிரிவு வரைபடம், மனை வரைபடம், நில உரிமை சான்று, நில அளவை துறை சான்று மற்றும் வில்லங்க சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிய தொகையினை செலுத்தி 03.11.2018 தேதிக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு ஐந்து மண்டல அலுவலங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.