யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு தங்க நாணயம் வழங்கிய ரயில்வே

கோவை: ரயில்வே நிர்வாகத்தின் யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.


கோவை: ரயில்வே நிர்வாகத்தின் யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யாமல் பயணச்சீட்டு பெரும் விதமாக யு.டி.எஸ். செயலியை ரயில்வே நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செயலியை பிரபலப் படுத்தும் நோக்கில், கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து போட்டி ஒன்றை நடத்தினர். 



அதில், யு.டி.எஸ். செயலியை பயன்படுத்துவோரில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு தங்க நாணயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துக்குமார் என்ற ரயில் பயணி தங்க நாணயத்தை பரிசாக வென்றார். மேலும், சாந்தி என்ற பயணி மூன்று மாதங்களுக்கான ரயில் பயண சீட்டை வென்றார்.

சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில் பயணிகளில் 3 சதவீதம் பேர், அதாவது 6 ஆயிரம் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருவதாகவும், இந்த செயலியை பிரபலப்படுத்த டிக்கெட் வழங்கும் இடத்திலும் இந்த செயலியை உபயோகிக்கும் வண்ணம் இயந்திரம் வைக்கப்பட உள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...