கோவை: ரயில்வே நிர்வாகத்தின் யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை: ரயில்வே நிர்வாகத்தின் யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யாமல் பயணச்சீட்டு பெரும் விதமாக யு.டி.எஸ். செயலியை ரயில்வே நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செயலியை பிரபலப் படுத்தும் நோக்கில், கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து போட்டி ஒன்றை நடத்தினர்.

அதில், யு.டி.எஸ். செயலியை பயன்படுத்துவோரில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு தங்க நாணயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துக்குமார் என்ற ரயில் பயணி தங்க நாணயத்தை பரிசாக வென்றார். மேலும், சாந்தி என்ற பயணி மூன்று மாதங்களுக்கான ரயில் பயண சீட்டை வென்றார்.
சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில் பயணிகளில் 3 சதவீதம் பேர், அதாவது 6 ஆயிரம் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருவதாகவும், இந்த செயலியை பிரபலப்படுத்த டிக்கெட் வழங்கும் இடத்திலும் இந்த செயலியை உபயோகிக்கும் வண்ணம் இயந்திரம் வைக்கப்பட உள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.