சேலம்: எட்டு வழிச்சாலை குறித்து சேலத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.
சேலம்: எட்டு வழிச்சாலை குறித்து சேலத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.
சென்னை-சேலம் வரை எட்டுவழி பசுமை வழிச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர்.
மேலும், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்தனர். ஆனால், எதிர்ப்புகளையும் மீறி சாலை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில், இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அரசு கைது செய்து வருகிறது.
இந்த சூழலில், பசுமை வழிச்சாலை அமைப்பது குறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். ஆனால், அங்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவர் தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை-சேலம் வரை எட்டுவழி பசுமை வழிச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர்.
மேலும், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்தனர். ஆனால், எதிர்ப்புகளையும் மீறி சாலை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில், இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அரசு கைது செய்து வருகிறது.
இந்த சூழலில், பசுமை வழிச்சாலை அமைப்பது குறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். ஆனால், அங்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவர் தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார்.