எட்டு வழிச்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட சீமான் கைது

சேலம்: எட்டு வழிச்சாலை குறித்து சேலத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.

சேலம்: எட்டு வழிச்சாலை குறித்து சேலத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.

சென்னை-சேலம் வரை எட்டுவழி பசுமை வழிச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர்.

மேலும், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்தனர். ஆனால், எதிர்ப்புகளையும் மீறி சாலை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில், இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அரசு கைது செய்து வருகிறது.

இந்த சூழலில், பசுமை வழிச்சாலை அமைப்பது குறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். ஆனால், அங்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவர் தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...