மீன்களின் வரத்து அதிகரிப்பால் கோவையில் மீன்களின் விலை சரிவு: தற்போதைய விலை என்ன?

கோவை: உக்கடம் மொத்தம் மீன் மார்க்கெட்டிற்கு இன்று மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சில்லரை விற்பனையில் மீன்களின் விலை சரிவை சந்துள்ளது.

கோவை: உக்கடம் மொத்தம் மீன் மார்க்கெட்டிற்கு இன்று மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சில்லரை விற்பனையில் மீன்களின் விலை சரிவை சந்துள்ளது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு கன்னியாகுமரி, கேரள அரபிக்கடல் பகுதிகள், நாகப்பட்டினம், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வருகின்றன.

இதனை உக்கடம் சில்லரை மீன் மார்க்கெட் பகுதியிலுள்ள 48 கடை வியாபாரிகளும் எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். அதுபோக. மாவட்டம் முழுவதும் சில்லரை விற்பனையாளர்கள் எடுத்து சென்று பல்வேறு பகுதிகளில் வியாபாரம் செய்கின்றனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் புயல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைந்தது.

கடல் சீற்றம் குறைந்ததை அடுத்து உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலை சரிவடைந்துள்ளது.

விற்பனை

உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு சுமாராக நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 டன் வரை மீன்கள் வருகின்றன. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 70 முதல் 80 டன் வரை மீன்கள் வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக 10 டன் வரை மட்டுமே மீன்கள் வந்த நிலையில் இன்று மீண்டும் 30 டன்கள் மீன்கள் வரத்தொடங்கின.

இதனால் கிலோ ரூ.1100-க்கு விற்பனையான வஞ்சரம் மீன் இன்று ரூ.650-க்கு விற்பனையாகிறது. மேலும், ரூ.220-க்கு விற்பனையான அயிலை மீன் ரூ.180-க்கும், ரூ.400--க்கு விற்பனையான பாறை மீன் ரூ.350-க்கும், ரூ. 250-க்கு விற்பனையான சங்கரா மீன் ரூ.170-க்கும், ரூ.400-க்கு விற்பனையான மீன் ரூ.300-க்கும், ரூ.400-க்கு விற்பனையான ஊழி மீன் ரூ.300-க்கும், ரூ.150-க்கு விற்பனையான மத்தி மீன் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மீன்களில் பார்மலின் ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்கிற வதந்தி காரணமாக சென்னையில் மீன்களின் விலை கடும் விலை சரிவை சந்தித்த நிலையில், கோவையில் வரத்து அதிகம் காரணமாகவே விலை சரிவு சந்துள்ளது என்று வியாபாரிகள் கூறினார்.

இது குறித்து உக்கடம் மீன் மார்க்கெட் தலைவர் H.S. பாவா கூறுகையில், "கோவையில் வழக்கம் போல் மீன் வியாபாரம் நடைபெறுகிறது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் இங்கு உள்ள மீன்களின் எந்த ரசாயனமும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. வரத்து அதிகம் காரணமாக தான் மீன்கள் விலை குறைந்துள்ளது," என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...