திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் உட்பட மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் உட்பட மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பல்லடம் அருகே உள்ள ஆர்.எம்.நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. பொன்னுசாமி தினமும் கிணற்றில் மோட்டர் போடுவது வழக்கம் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால், நேற்று மாலை கிணற்றில் மோட்டர் போடுவதற்காக பொன்னுசாமி சென்றார்.
அப்போது, கிணற்றில் துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து கிணற்றினுள் பார்த்த போது அதனுள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் மிதந்துள்ளன. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அழுகிய நிலையில் மிதந்த மூன்று உடல்களையும் மீட்டனர். அந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என்றும், குழந்தைகளுக்கு 12 மற்றும் 8 வயது இருக்கும் என்றும் தெரிவித்த போலீசார் அவர்கள் யார்? கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளுடன் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் அருகே உள்ள ஆர்.எம்.நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. பொன்னுசாமி தினமும் கிணற்றில் மோட்டர் போடுவது வழக்கம் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால், நேற்று மாலை கிணற்றில் மோட்டர் போடுவதற்காக பொன்னுசாமி சென்றார்.
அப்போது, கிணற்றில் துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து கிணற்றினுள் பார்த்த போது அதனுள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் மிதந்துள்ளன. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அழுகிய நிலையில் மிதந்த மூன்று உடல்களையும் மீட்டனர். அந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என்றும், குழந்தைகளுக்கு 12 மற்றும் 8 வயது இருக்கும் என்றும் தெரிவித்த போலீசார் அவர்கள் யார்? கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளுடன் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.