யானைகள் வழித்தடங்களைக் கணக்கெடுக்கும் பணி : வதந்திகளை நம்ப வேண்டாம் என நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, யானைகள் வழித்தடப் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, யானைகள் வழித்தடப் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 400 குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தங்களின் குடியிருப்புகள் போய்விடுமோ என்ற பீதியில் ஒருசிலர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :- யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 12-ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அடையாளம் கண்டு, அவை எப்போது கட்டப்பட்டது, எதற்காகக் கட்டப்பட்டது, தற்போது அக்கட்டிடங்கடள எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு விபரங்களை வரும் அடுத்த மாதம் 08-ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

எனவே, யானை வழித்தடங்கள் குறித்த கணக்கெடுப்பு விபரங்களை சமர்ப்பிக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் உதகை வட்டத்தில் உள்ள யானைகள் வழித்தடப் பகுதிகளில் கணக்கெடுப்பு பணி மட்டுமே மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...