நீலகிரி : உதகையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்துள்ளன.
நீலகிரி : உதகையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்துள்ளன.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கூடலூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்திற்கு மேலாக குளிர் காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடந்த 3 நாட்களாக நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை உதகையில் உள்ள மாரிஸ் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியிருப்புவாசிகளின் கார்கள் இந்த மண்சரிவில் புதையுண்டன. மேலும், இரண்டு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

இதனிடையே, நீலகிரியில் அடுத்த இருநாட்களுக்குக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் பயத்துடன் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கூடலூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்திற்கு மேலாக குளிர் காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடந்த 3 நாட்களாக நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை உதகையில் உள்ள மாரிஸ் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியிருப்புவாசிகளின் கார்கள் இந்த மண்சரிவில் புதையுண்டன. மேலும், இரண்டு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

இதனிடையே, நீலகிரியில் அடுத்த இருநாட்களுக்குக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் பயத்துடன் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.