பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை -தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 4-ம் தேதி நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை நீர்மட்டம் எட்டியதால் அன்று முதலே அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. 



இன்று காலை முதல் மதியம் வரை அணையின் நீர்வரத்தான 8000 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து திடீரென 22,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்வரத்து அப்படியே வினாடிக்கு 22,000 கனஅடி என பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 



இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, கரைபுரண்டு ஓடும் பவானியாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவித்துள்ளார். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கவும் கரையோர பகுதிகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...