கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 4-ம் தேதி நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை நீர்மட்டம் எட்டியதால் அன்று முதலே அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை முதல் மதியம் வரை அணையின் நீர்வரத்தான 8000 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து திடீரென 22,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்வரத்து அப்படியே வினாடிக்கு 22,000 கனஅடி என பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, கரைபுரண்டு ஓடும் பவானியாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவித்துள்ளார். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கவும் கரையோர பகுதிகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 4-ம் தேதி நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை நீர்மட்டம் எட்டியதால் அன்று முதலே அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை முதல் மதியம் வரை அணையின் நீர்வரத்தான 8000 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து திடீரென 22,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்வரத்து அப்படியே வினாடிக்கு 22,000 கனஅடி என பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, கரைபுரண்டு ஓடும் பவானியாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவித்துள்ளார். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கவும் கரையோர பகுதிகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.