நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.
நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.
இதில் முப்படை அளவிலான நான்கு குழுக்கள் பங்கேற்றன. இந்த ஓட்டப் பந்தயம் முப்படை வீரர்களின் வேகம், உடல் திறன், மற்றும் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு பெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களை கொண்டது. மொத்தம் இருபத்து நான்கு வீரர்கள் பங்கேற்கும் ஓட்டப் பந்தயமானது பத்து கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில், தனிநபர் வெற்றியாக ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த சிப்பாய் அனில்குமார் யாதவ் 31 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த அவில்தார் அனிஷ் தாபா இரண்டாம் இடத்தையும், அதே சிவப்பு படையைச் சேர்ந்த நாயக் தீர்த்த குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வெற்றி கோப்பையை சிவப்பு படை அணியினர் கைபற்றி சென்றனர்.

இதில் முப்படை அளவிலான நான்கு குழுக்கள் பங்கேற்றன. இந்த ஓட்டப் பந்தயம் முப்படை வீரர்களின் வேகம், உடல் திறன், மற்றும் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு பெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களை கொண்டது. மொத்தம் இருபத்து நான்கு வீரர்கள் பங்கேற்கும் ஓட்டப் பந்தயமானது பத்து கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில், தனிநபர் வெற்றியாக ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த சிப்பாய் அனில்குமார் யாதவ் 31 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த அவில்தார் அனிஷ் தாபா இரண்டாம் இடத்தையும், அதே சிவப்பு படையைச் சேர்ந்த நாயக் தீர்த்த குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வெற்றி கோப்பையை சிவப்பு படை அணியினர் கைபற்றி சென்றனர்.
