கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை காவல்துறையினர் சோதனை செய்து அனுப்புவது வழக்கம். இதற்காக நுழைவு வாயில் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சோதனையின் போது நுழைவு வாயில் முன்பு உள்ள கதவு ஒரு பக்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இதனால் நான்கு சக்கரம் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் உள்ளே, வெளியே போக முடியாத சூழல் ஏற்படுகின்றது.

காவல் துறையினர் இதனை சீர் செய்ய இரு கதவுகளையும் திறக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண நான்கு சக்கர சென்று வர முன் பக்கமும் இருசக்கர வாகனங்கள் நுழைய பின் பக்கம் பயன்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதே போல் மக்களை சோதனை செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளையும் ஓரமாக வைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை காவல்துறையினர் சோதனை செய்து அனுப்புவது வழக்கம். இதற்காக நுழைவு வாயில் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சோதனையின் போது நுழைவு வாயில் முன்பு உள்ள கதவு ஒரு பக்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இதனால் நான்கு சக்கரம் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் உள்ளே, வெளியே போக முடியாத சூழல் ஏற்படுகின்றது.

காவல் துறையினர் இதனை சீர் செய்ய இரு கதவுகளையும் திறக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண நான்கு சக்கர சென்று வர முன் பக்கமும் இருசக்கர வாகனங்கள் நுழைய பின் பக்கம் பயன்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதே போல் மக்களை சோதனை செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளையும் ஓரமாக வைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
