கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் போகூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (60, வடிவேல் (32), பிரகாஷ் (38), வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32), கிருஷ்ணன் (54) ஆகியோர் என தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் ஐந்து பேருக்கும் தலா ஐந்தாயிரம் அபராதம் வித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஐந்து கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் போகூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (60, வடிவேல் (32), பிரகாஷ் (38), வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32), கிருஷ்ணன் (54) ஆகியோர் என தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் ஐந்து பேருக்கும் தலா ஐந்தாயிரம் அபராதம் வித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஐந்து கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.