நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.
நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் சிவசேனா கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ரமேஷ் பாபு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொதுமக்களுக்குக் கந்து வட்டியை கொடுத்து தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலை பொதுமக்களுக்குப் பயன் தரும் சாலையாக இருப்பதால், அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலை செயல்படுத்தப்போவதாக தெரிவித்திருப்பதை சிவசேனா கட்சி ஆதரிக்கிறது. ரஜினிகாந்த் பா.ஜ.க.,வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் சிவசேனா கட்சியும் அதில் இணையும், இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் சிவசேனா கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ரமேஷ் பாபு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொதுமக்களுக்குக் கந்து வட்டியை கொடுத்து தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலை பொதுமக்களுக்குப் பயன் தரும் சாலையாக இருப்பதால், அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலை செயல்படுத்தப்போவதாக தெரிவித்திருப்பதை சிவசேனா கட்சி ஆதரிக்கிறது. ரஜினிகாந்த் பா.ஜ.க.,வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் சிவசேனா கட்சியும் அதில் இணையும், இவ்வாறு அவர் கூறினார்.