உதகை - கூடலூர் சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்து : 18 வயது இளைஞர் பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்தில், 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்தில், 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன. 



இந்நிலையில், நீலகிரியில் நேற்று மாலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், இன்று உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் என்னும் இடத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் காலை நேரம் என்பதாலும் கிறிஸ்துவ ஆலய வழிபாட்டுக்கு சென்ற மக்கள், திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதில், இம்மானுவேல் அகஸ்டின் (18) மரம் விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்டார். தலையில் பலத்த காயமடைந்த இவரை, பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இம்மானுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு அகற்றினர். இதனால், கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் ஆபத்தான நிலையில் மரங்கள் இருப்பதால், அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பிங்கர் போஸ்ட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் கூடலூர், உதகை ஆகிய பகுதிகளை தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேரிடர் கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...