திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.

திருப்பூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி அல்லி தலைமையில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்வு ஏற்படுத்தினர். மேலும், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை நீதிமன்றங்களிலும் இந்த நிகழ்வு நடந்தது. மாவட்ட அளவில் மொத்தம் 3,154 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அதில், 1,393 வழக்குகளுக்கு ரூ. 54,65,98,719 கோடி மதிப்பில் சமரச தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 108 வயதான கருணையம்மாள் என்ற மூதாட்டிக்கு, 2017-ம் ஆண்டு அவரது மகன் விபத்தில் இறந்ததில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்று தரப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருப்பூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி அல்லி தலைமையில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்வு ஏற்படுத்தினர். மேலும், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை நீதிமன்றங்களிலும் இந்த நிகழ்வு நடந்தது. மாவட்ட அளவில் மொத்தம் 3,154 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அதில், 1,393 வழக்குகளுக்கு ரூ. 54,65,98,719 கோடி மதிப்பில் சமரச தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 108 வயதான கருணையம்மாள் என்ற மூதாட்டிக்கு, 2017-ம் ஆண்டு அவரது மகன் விபத்தில் இறந்ததில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்று தரப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.