கோவை: சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் இறுதிச்சடங்கு செய்து விநோதப் போராட்டம் நடத்தினர்.
கோவை: சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் இறுதிச்சடங்கு செய்து விநோதப் போராட்டம் நடத்தினர்.

ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டார்.

மேலும், 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிராகப் பேரணி நடத்தினர். மேலும், அரசமர வீதியில் இருக்கும் கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு இறுதிச்சடங்கு செய்தனர். அப்போது, ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டம் நடத்தினர்.
