கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கலைமகள் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவதற்கும் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பயிற்சியாளர் பிடித்து தள்ளியதில், 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி, முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரியில் நடந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் :- கோவையில் மாணவி பலியான செய்தியுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளது. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு உயிரை இழந்திருக்கிறோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாகப் பயிற்சி பெற்றவர் இல்லை, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.