பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நரசீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்கள்,மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது, மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார்.

அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்திருந்தது.

இந்த சூழலில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி அறிவித்துள்ளார். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...