கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நரசீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்கள்,மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது, மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார்.
அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்திருந்தது.
இந்த சூழலில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி அறிவித்துள்ளார்.
நரசீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்கள்,மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது, மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார்.
அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்திருந்தது.
இந்த சூழலில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி அறிவித்துள்ளார்.