மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைப்பு

சென்னை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை, தமிழில் 24 ஆயிரம் பேர் எழுதினர். அதில் தமிழில் கேட்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு வினாவுக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டனர். இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலையும் வெளியிட உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டாம் கட்ட நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால், இரண்டாம்கட்ட கலந்தாய்வை தமிழக அரசு நிறுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...