கோவையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம்

கோவை இருகூர் பிரிவு அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த19 பேருக்கும் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: இருகூர் பிரிவு அருகே ஆமினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 19 பேருக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருகூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் குப்பம் என்ற பகுதியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு முருகன் டிராவல்ஸ் என்ற ஆமினி பேருந்து சென்று கொண்டு இருந்தது.



இந்நிலையில், முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை முந்த முயன்ற பேருந்து போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரு பெண்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.



விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டு கேரளாவிற்கு திரும்பி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் உதவியுடன் தூக்கினர்.



இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பைப்பாஸ் சாலையில் போட்டி போட்டு வாகனம் ஓட்டுபவர்களின் அஜாக்கிரதையே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...