நீலகிரியில் ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
நீலகிரி: நீலகிரியில் ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் 110-ம் விதியின் கீழ், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் உருவாக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழகத்தில் 341 ரத்த வங்கிகளும் 519 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 5 ரத்த வங்கிகளும், 3 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. முதன்முறையாக உதகை தலைமை மருத்துவமனையில் 10 ரத்தக் கூறுகள் பிரிப்பு சேமிப்பு மையத்தில் செயல்பட உள்ளது. இந்தக் கூறுகள் பிரிப்பு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் FFP (Fresh Frozen PLaSMa) ஆகிய மூன்றும் ஒரு யூனிட் இரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனித்தனியே சேமிக்கப்பட்டு மூன்று விதமான நோயாளிகளுக்கு செலுத்தி உயிர் காக்க முடியும்.

நீலகிரி மாவட்டத்தில் ஒருவருடத்திற்கு சராசரியாக 2,500 முதல் 3,000 யூனிட் வரை ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் 110-ம் விதியின் கீழ், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் உருவாக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழகத்தில் 341 ரத்த வங்கிகளும் 519 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 5 ரத்த வங்கிகளும், 3 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. முதன்முறையாக உதகை தலைமை மருத்துவமனையில் 10 ரத்தக் கூறுகள் பிரிப்பு சேமிப்பு மையத்தில் செயல்பட உள்ளது. இந்தக் கூறுகள் பிரிப்பு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் FFP (Fresh Frozen PLaSMa) ஆகிய மூன்றும் ஒரு யூனிட் இரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனித்தனியே சேமிக்கப்பட்டு மூன்று விதமான நோயாளிகளுக்கு செலுத்தி உயிர் காக்க முடியும்.

நீலகிரி மாவட்டத்தில் ஒருவருடத்திற்கு சராசரியாக 2,500 முதல் 3,000 யூனிட் வரை ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.