திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் பலர் கடைகள் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். இதனை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், கடைகளை யாரும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., சாலையில் அனுமதியின்றி இருந்த கடைகள் மற்றும் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். அப்போது, பொதுமக்கள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கக் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் பலர் கடைகள் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். இதனை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், கடைகளை யாரும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., சாலையில் அனுமதியின்றி இருந்த கடைகள் மற்றும் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். அப்போது, பொதுமக்கள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கக் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.