நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி என தொடரப்பட்ட வழக்கில், தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்க சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி என தொடரப்பட்ட வழக்கில், தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்க சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்தது. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வு சரியான முறையில் நடந்துள்ளதாகப் பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு சிக்கல் எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்தது. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வு சரியான முறையில் நடந்துள்ளதாகப் பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு சிக்கல் எழுந்துள்ளது.