குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குமாரனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கௌதமன் என்பவர் மகன் திலிபன் (17). இவர், தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தார். அதேபகுதியில், வசிக்கும் லாரி ஓட்டுநர் நல்லதம்பி என்பவரது மகன் பரத் (12) அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். 

விடுமுறை தினமான இன்று திலிபன், பரத் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து மாணிக்காபுரம் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நால்வரும் நீரினுள் இழுக்கப்பட்டுள்ளனர். இதில், பயந்து போன சிறுவர்கள் அலறியுள்ளனர். அவர்ளது சத்தத்தைக் கேட்ட அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர். ஆனால், அதற்குள் திலிபனும், பரத்தும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் இருவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...