திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் ஏராளமான சாய ஆலைகள் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆற்றோரங்களில் அனுமதி பெறாமல் செயல்படும் சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுகின்றனர்.
இதனால் ஆற்று நீர் எவ்வித உபயோகமின்றி பாழாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக அங்கேரிபாளையம்-நல்லாற்றின் ஓரமாக செயல்படும் சாய ஆலைகள் உள்ள பகுதியில் பட்டப் பகலிலேயே சாயக்கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.

ஆற்றின் ஓரமாகவே சாயக்கழிவு நீர் சென்ற காரணத்தால், பகல் நேரத்திலேயே சாய ஆலையினர் ஆற்றில் கழிவு நீரை கலக்க துணிந்து விட்டனர் என கூறிய பொதுமக்கள், இதுபோன்ற அனுமதி பெறாமல் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் போன்ற நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடானது தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே ஆற்றில் சாய்க்கழிவு நீரை கலக்கும் செயலை தடுக்க முடியும் என்றும், நல்லாறு, நொய்யலாறு போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருப்பூரில் ஏராளமான சாய ஆலைகள் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆற்றோரங்களில் அனுமதி பெறாமல் செயல்படும் சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுகின்றனர்.
இதனால் ஆற்று நீர் எவ்வித உபயோகமின்றி பாழாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக அங்கேரிபாளையம்-நல்லாற்றின் ஓரமாக செயல்படும் சாய ஆலைகள் உள்ள பகுதியில் பட்டப் பகலிலேயே சாயக்கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.

ஆற்றின் ஓரமாகவே சாயக்கழிவு நீர் சென்ற காரணத்தால், பகல் நேரத்திலேயே சாய ஆலையினர் ஆற்றில் கழிவு நீரை கலக்க துணிந்து விட்டனர் என கூறிய பொதுமக்கள், இதுபோன்ற அனுமதி பெறாமல் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் போன்ற நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடானது தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே ஆற்றில் சாய்க்கழிவு நீரை கலக்கும் செயலை தடுக்க முடியும் என்றும், நல்லாறு, நொய்யலாறு போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.