திருப்பூரில் பட்டப்பகலில் சாலையோரங்களில் செல்லும் சாய்க்கழிவு நீர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் ஏராளமான சாய ஆலைகள் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆற்றோரங்களில் அனுமதி பெறாமல் செயல்படும் சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுகின்றனர். 

இதனால் ஆற்று நீர் எவ்வித உபயோகமின்றி பாழாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக அங்கேரிபாளையம்-நல்லாற்றின் ஓரமாக செயல்படும் சாய ஆலைகள் உள்ள பகுதியில் பட்டப் பகலிலேயே சாயக்கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.



ஆற்றின் ஓரமாகவே சாயக்கழிவு நீர் சென்ற காரணத்தால், பகல் நேரத்திலேயே சாய ஆலையினர் ஆற்றில் கழிவு நீரை கலக்க துணிந்து விட்டனர் என கூறிய பொதுமக்கள், இதுபோன்ற அனுமதி பெறாமல் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் போன்ற நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடானது தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே ஆற்றில் சாய்க்கழிவு நீரை கலக்கும் செயலை தடுக்க முடியும் என்றும், நல்லாறு, நொய்யலாறு போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...