திருப்பூரில் சாய கழிவு நீரை நீர் நிலைகளில் கலந்துவிட்ட நிறுவனங்களுக்கு சீல்

திருப்பூர்: இந்தியாவிலேயே அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தருவதில் தன்னிகரற்ற மாவட்டமாக திகழ்வது திருப்பூர் மாவட்டம். இந்த பெருமையை பெற்ற திருப்பூரில் விவசாயம் என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் நீர் நிலைகளில் முறைகேடாக சாயக் கழிவு நீரினை கலந்து வரும் ஆலைகள் தான்.

திருப்பூர்: இந்தியாவிலேயே அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தருவதில் தன்னிகரற்ற மாவட்டமாக திகழ்வது திருப்பூர் மாவட்டம். இந்த பெருமையை பெற்ற திருப்பூரில் விவசாயம் என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் நீர் நிலைகளில் முறைகேடாக சாயக் கழிவு நீரினை கலந்து வரும் ஆலைகள் தான். 



திருப்பூரில் ஏராளமான சாய, சலவை ஆலைகள் இயங்கி வந்தாலும் அவற்றில் முறையான அனுமதி பெற்று இயங்கி வருவது மிகக் குறைந்தவையே. சிறிய அளவில் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் மற்றும் பிரிண்டிங் பட்டறைகள் முறைகேடாக சாய தண்ணீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றன. இவற்றிற்கு சற்றும் சளைக்காமல் அனுமதி பெற்ற சாய ஆலைகளும் தண்ணீரை நீர்நிலைகளில் திருட்டுத்தனமாக கலந்து விடுகின்றன. 

அவ்வாறு வேட்டுவம்பாளையத்தில் சக்திவேல், திருநாவுக்கரசு என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு சலவை ஆலைகள் மணியன்காரம்பாளையம் பகுதியில் செயல்படும் சரவணன் என்பவருக்கு சொந்தமான கெம்டெக் நிறுவனத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். 



இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறும் பொழுது, "கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, 2018-ம் ஆண்டு மே மாதம் வரை அனுமதி பெற்று முறைகேடாக சாய தண்ணீரை வெளியேற்றிய 24 சாய ஆலைகள் மீதும், அனுமதி பெறாமல் சாய நீர் வெளியேற்றி வந்த 110 ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வருங்கால சந்ததியினரை வாழ வழியில்லாமல் செய்யும் இது போன்ற சாய ஆலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...