திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் லூர்து சேவியர் என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், லூர்து சேவியருக்கு இரு நாட்களுக்கு முன்பு மாலை 6 மணியளவில், அவருடைய செல்போனிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ரூ. 30 லட்சம் பணம் உடனடியாக கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பனியன் நிறுவனத்தில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்தும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லூர்து சேவியர், கொலை மிரட்டல் தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை மிரட்டல் விடுத்தது லூர்து சேவியரின் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பார்த்தசாரதி மற்றும் தற்போதைய ஊழியர் வசந்த் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.