கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய மகேந்திரன் (35) என்பவர் உயிரிழந்ததை செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தேன். தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், சுத்தப்படுத்த தேவையான தக்க உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது.
கழிவு நீரை மனிதர்கள் சுத்தப்படுத்த கூடாது என்பது சட்டமாக உள்ளது. ஒரு சில பணிகளைத் தவிர மற்ற விதமாக இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.
கோவையில் மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக அவருக்கு தக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா?" போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய மகேந்திரன் (35) என்பவர் உயிரிழந்ததை செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தேன். தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், சுத்தப்படுத்த தேவையான தக்க உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது.
கழிவு நீரை மனிதர்கள் சுத்தப்படுத்த கூடாது என்பது சட்டமாக உள்ளது. ஒரு சில பணிகளைத் தவிர மற்ற விதமாக இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.
கோவையில் மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக அவருக்கு தக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா?" போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.