கோவை: லிங்கப்ப செட்டி வீதியிலுள்ள பாலவிநாயகர் கோவில் பூட்டை உடைத்து 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: லிங்கப்ப செட்டி வீதியிலுள்ள பாலவிநாயகர் கோவில் பூட்டை உடைத்து 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை லிங்கப்ப செட்டி வீதியில் பாலவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த சாமிக்கு அணிவிக்கக்கூடிய 8 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற துணை ஆணையர் பெருமாள் மற்றும் தடய அறிவியல் துறையினர் கைரேகைகளை எடுத்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை லிங்கப்ப செட்டி வீதியில் பாலவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த சாமிக்கு அணிவிக்கக்கூடிய 8 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற துணை ஆணையர் பெருமாள் மற்றும் தடய அறிவியல் துறையினர் கைரேகைகளை எடுத்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.