கோவை - கரூர் இடையிலான தெற்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கோவை: கோவை மாவட்டம் செலக்கரச்சல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் தெற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் செலக்கரச்சல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் தெற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர். அப்போது, விவசாயிகள் கூறியதாவது :- ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை வழியாக தெற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இணைப்பு சாலைகளாக இரண்டு சாலைகள் இருக்கும் நிலையில், தெற்கு புறவழிச்சாலை என்பது தேவையற்றது.

மேலும், தெற்கு புறவழிச்சாலை குறித்து விவசாயிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விவசாயிகளின் நிலத்தை அளந்து சென்று இருக்கின்றனர். மேலும், புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் 800 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை கைவிடவேண்டும். இது தொடர்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டத்தினை நடத்தி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளனர், இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...