கோவை: கோவை மாவட்டம் செலக்கரச்சல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் தெற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் செலக்கரச்சல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் தெற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர். அப்போது, விவசாயிகள் கூறியதாவது :- ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை வழியாக தெற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இணைப்பு சாலைகளாக இரண்டு சாலைகள் இருக்கும் நிலையில், தெற்கு புறவழிச்சாலை என்பது தேவையற்றது.
மேலும், தெற்கு புறவழிச்சாலை குறித்து விவசாயிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விவசாயிகளின் நிலத்தை அளந்து சென்று இருக்கின்றனர். மேலும், புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் 800 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை கைவிடவேண்டும். இது தொடர்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டத்தினை நடத்தி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளனர், இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.