சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.



கோவை மாநகராட்சியில் தண்ணீர் வழங்கும் உரிமத்தை தனியார் நிறுவனமாக சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் பேசுகையில், "மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான தனியார் பிரென்சு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே அந்நிறுவனத்துடனான 30 பக்க ஒப்பந்தத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

குடிநீரை வழங்க வேண்டிய அரசின் கடமை என்பதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். யார் அரசை கேள்வி கேட்டாலும் கைது என்ற நடவடிக்கை, தமிழகம் மற்றும் இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை போல் உள்ளது." என்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...