கோவை : சுயநிதி கல்லூரி முதல்வர்களின் வயது வரம்பு குறித்த விவகாரத்தில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை : சுயநிதி கல்லூரி முதல்வர்களின் வயது வரம்பு குறித்த விவகாரத்தில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சுயநிதிக் கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பை 65-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு, பதிலளித்து உயர்கல்வித்துறையின் செயலர் சுனில் பலிவால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயநிதி கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பு 62 என்பதில் மாற்றமில்லை. இதனைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சுயநிதிக் கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பை 65-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு, பதிலளித்து உயர்கல்வித்துறையின் செயலர் சுனில் பலிவால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயநிதி கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பு 62 என்பதில் மாற்றமில்லை. இதனைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.