ஆசிரியரின் பணியிட மாற்றம் ரத்து: மாணவர்களின் போராட்டத்திற்கு பரிசு கொடுத்தது கல்வித்துறை

திருவள்ளூர்: ஆசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிரதி பலனாக அவரது பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

திருவள்ளூர்: ஆசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிரதி பலனாக அவரது பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான். ஆசிரியரைத் தாண்டி மாணவர்களுடன் நண்பரைப்போல் பழகியதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இவர்மீது அதீத பிரியம்.

இந்நிலையில், அவருக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. அதற்கான ஆர்டரை பெற அவர் பள்ளிக்கு சென்ற போது மாணவர்கள், "பள்ளியை விட்டுப் போகாதீர்கள் சார்.." என்று அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பிரபலமானது. மாணவர்கள் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் பகவானை பலரும் பாராட்டினர்.



இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை, ஆசிரியர் பகவானை வெளியகரம் பள்ளியிலே தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிடை மாற்றம் ரத்து செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...