வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (50). இவர் அதே பகுதியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அதே நேரத்தில் அவர்களது மாட்டு வண்டியை மட்டும் பறிமுதல் செய்துள்ளார். பணத்தையும் பெற்றுக்கொண்டு மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த அந்த மணல் கொள்ளையர்கள் இருவரும் ராஜேந்திரனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் மீது மணல் கொள்ளையர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (50). இவர் அதே பகுதியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அதே நேரத்தில் அவர்களது மாட்டு வண்டியை மட்டும் பறிமுதல் செய்துள்ளார். பணத்தையும் பெற்றுக்கொண்டு மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த அந்த மணல் கொள்ளையர்கள் இருவரும் ராஜேந்திரனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் மீது மணல் கொள்ளையர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.