சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும்: பா.ம.க.,வினர் ஆட்சியரிடம் மனு

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகரில் திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் சாலையை கடப்பதில் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துக்களும் அதிகமாக ஏற்படுவதை தவிர்க்க அரசு அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும், காந்திபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில் நூறடி சாலையில் உள்ள மேம்பாலத்தை பார்ப்பதற்கும், பயணிப்பதற்கும் பயணிகள் அச்சப்படுவதால் பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்த பிறகு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும், ஆவாரம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

எனவே பாலம் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...