வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாகப் பள்ளி மீது மாணவன் புகார்: பள்ளி நிர்வாகம் விளக்கம்

கோவை: வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக தனியார் பள்ளியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், முறையாக பள்ளி வராதக் காரணத்தினால் நடவடிக்கை எடுத்ததாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


கோவை: வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக தனியார் பள்ளியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், முறையாக பள்ளி வராதக் காரணத்தினால் நடவடிக்கை எடுத்ததாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கோகுலம் காலனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் தனியார் நிறுவனத்தில் கிளர்க்காகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தீபக் வடவள்ளி பி.என். புதூரில் உள்ள ஏ.பி.எம் வித்யாலாயா பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாகப் படித்து வந்தார். இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பச் சூழல் காரணமாக இந்த வருடம் கல்வி கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகத்திடம் காலஅவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 



இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் படிக்க மனு அளித்ததாகக் கூறிய அவர்கள், அங்கும் பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் சேர்க்க மறுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினர். இதனால், தனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் கூறி, ஏ.பி.எம் வித்யாலாயா பள்ளியின் நடவடிக்கைக் குறித்தும், மாற்றுப்பள்ளியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து தனியார் பள்ளி நிர்வாகி மணிவண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :- மாணவன் தீபக் முறையாக பள்ளிக்கு வராமல் இருந்து வந்தார். 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயார் செய்ய மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வரும் நிலையில், வகுப்புகளைப் புறக்கணித்ததை தீபக்கின் பெற்றோர்களிடம் தெரிவித்தோம். அவர்களது விருப்பத்தின் பேரிலேயே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. எது எப்படியோ மாணவனின் பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், எனத் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...