கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிங்காநல்லூரை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சக்கர செட்டியார் குடியிருப்பு வளாகம் அருகே நேற்று மயில் ஒன்று எலக்ட்ரிக் வயர் மீது மோதி படுகாயமடைந்தது. இதனைக் கண்ட தெருநாய்கள் அந்தப் பறவையை கடித்துக் குதறின. இதனால், அதன் அபய ஒலியைக் கேட்ட பொதுமக்கள், மயிலை தெருநாய்களிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், இது குறித்து ஆத்மா அறக்கட்டளையின் உறுப்பினர் எஸ். மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அவர், மயிலை மீட்டு அதற்கு முதலுதவி அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் இதுபோன்று 7 மயில்கள் மீட்கப்பட்டுள்ளதாக தன்னார்வலர் மணிகண்டன் தெரிவித்தார்.
சிங்காநல்லூரை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சக்கர செட்டியார் குடியிருப்பு வளாகம் அருகே நேற்று மயில் ஒன்று எலக்ட்ரிக் வயர் மீது மோதி படுகாயமடைந்தது. இதனைக் கண்ட தெருநாய்கள் அந்தப் பறவையை கடித்துக் குதறின. இதனால், அதன் அபய ஒலியைக் கேட்ட பொதுமக்கள், மயிலை தெருநாய்களிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், இது குறித்து ஆத்மா அறக்கட்டளையின் உறுப்பினர் எஸ். மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அவர், மயிலை மீட்டு அதற்கு முதலுதவி அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் இதுபோன்று 7 மயில்கள் மீட்கப்பட்டுள்ளதாக தன்னார்வலர் மணிகண்டன் தெரிவித்தார்.